அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய அதிகார சபையில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் சுரேஷ் சலேயின் மனைவி, தனது பிள்ளைகள் இருவரும் தந்தை சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நபர் இதற்கு முன்னரும் பலமுறை தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்ததாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகள் வாகனத்தில் ஏறும் போது அருகில் நின்று அவர்களை படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த நபரை தாம் பல முறை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அருகிலேயே அவதானித்துள்ளதாகவும், அதனால் அவர் அந்த திணைக்களத்தின் அதிகாரியாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
"சுரேஷை (சிறைக்குள்) அடைத்து அவருக்குத் துன்புறுத்தல் தருவது போதாது என்று, தற்போது எனது பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பது முற்றிலும் அநியாயமானது" என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தனது கணவரான சுரேஷ் சலேயின் உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதாகத் தான் அஞ்சுவதாகவும், முழு குடும்பத்தினருக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக மின்னஞ்சல் மூலமும் தற்பொழுது நேரில் சென்றும் அளித்த முறைப்பாட்டை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் மனோரி சலே மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் சுரேஷ் சலேயின் மனைவி, தனது பிள்ளைகள் இருவரும் தந்தை சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நபர் இதற்கு முன்னரும் பலமுறை தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்ததாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகள் வாகனத்தில் ஏறும் போது அருகில் நின்று அவர்களை படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த நபரை தாம் பல முறை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அருகிலேயே அவதானித்துள்ளதாகவும், அதனால் அவர் அந்த திணைக்களத்தின் அதிகாரியாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
"சுரேஷை (சிறைக்குள்) அடைத்து அவருக்குத் துன்புறுத்தல் தருவது போதாது என்று, தற்போது எனது பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பது முற்றிலும் அநியாயமானது" என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தனது கணவரான சுரேஷ் சலேயின் உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதாகத் தான் அஞ்சுவதாகவும், முழு குடும்பத்தினருக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக மின்னஞ்சல் மூலமும் தற்பொழுது நேரில் சென்றும் அளித்த முறைப்பாட்டை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் மனோரி சலே மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
வரி செலுத்தவில்லையா? வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
Local
23 June 2026
குருணாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு
Local
23 June 2026
மன்னாரில் ஈக்கள், பறவைக் கழிவுகளுக்கு மத்தியில் வடை தயாரிப்பு : அதிரடியாக மூடப்பட்ட வடை தயாரிப்பு நிலையம்!
Local
23 June 2026
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தை முழுமையாகக் கணினிமயப்படுத்த அமைச்சரவை அனுமதி
Local
23 June 2026
விஜய் பிறந்தநாள் : த்ரிஷாவின் மௌனம் - ரஜினியின் வாழ்த்தின்மை குறித்து இணையத்தில் கிளம்பிய விவாதங்கள்!
Local
23 June 2026
"வழக்குகள் எங்களுக்கு அல்ல, நீங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்த உங்கள் நண்பர்களுக்கே உள்ளன!" - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் அதிரடி
Local
23 June 2026
சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு
Local
23 June 2026
"க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டம் வெறும் கண் துடைப்பு; அரசாங்கம் நாட்டை அல்ல, மக்களின் பணத்தையே சுத்தம் செய்கிறது!
Local
23 June 2026
VAT வரம்பைக் குறைக்கும் திட்டம் கைவிடப்பட்டது – பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
Local
23 June 2026
அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
Local
23 June 2026