வடக்கு மாகாண ஆளுநரால் தாம் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் ஞானபிரகாசம் கிஷோர் தாக்கல் செய்திருந்த மனுவை வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுப்புத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி ஆளுநரால் வெளியிடப்பட்ட பதவி நீக்க வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, ஞானபிரகாசம் கிஷோர் கடந்த 4ஆம் திகதி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சாவகச்சேரி நகர சபை தொடர்பில் விசாரணை நடத்திய தனிநபர் விசாரணை அதிகாரி க.அரியநாயகம், தனது அறிக்கையில் நகர சபையை முழுமையாகக் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த பின்னணியில், தன்னை மாத்திரம் இலக்கு வைத்து பதவி நீக்கியது ஏன் என மனுதாரர் தனது மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நகராட்சி மன்றங்களின் சுயாதீன அதிகாரங்களில் ஆளுநர் தலையீடு செய்வது ஜனநாயகத்தை மீறும் செயல் என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருப்பினும், தரப்பு வாதங்களை நீண்டநேரம் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி க.சதீஸ்வரன், ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு நீதிமன்ற அறிவித்தலை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுப்புத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி ஆளுநரால் வெளியிடப்பட்ட பதவி நீக்க வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, ஞானபிரகாசம் கிஷோர் கடந்த 4ஆம் திகதி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சாவகச்சேரி நகர சபை தொடர்பில் விசாரணை நடத்திய தனிநபர் விசாரணை அதிகாரி க.அரியநாயகம், தனது அறிக்கையில் நகர சபையை முழுமையாகக் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த பின்னணியில், தன்னை மாத்திரம் இலக்கு வைத்து பதவி நீக்கியது ஏன் என மனுதாரர் தனது மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நகராட்சி மன்றங்களின் சுயாதீன அதிகாரங்களில் ஆளுநர் தலையீடு செய்வது ஜனநாயகத்தை மீறும் செயல் என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருப்பினும், தரப்பு வாதங்களை நீண்டநேரம் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி க.சதீஸ்வரன், ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு நீதிமன்ற அறிவித்தலை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Latest News
ஏவுகணைப் பற்றாக்குறை: யுக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா உக்கிரத் தாக்குதல்!
Local
06 July 2026
"பொறுப்பேற்பதாக இருந்தால் அமைச்சர் பதவி விலக வேண்டும்" – அஜித் பி. பெரேரா
Local
06 July 2026
பாலினப் பாகுபாடான கருத்து - பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணுக்குக் கிடைத்த சர்வதேச நீதி!
Local
06 July 2026
ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ : வீடுகளை விட்டு ஓடும் மக்கள்!
Local
06 July 2026
ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: கிஷோரின் கோரிக்கை நிராகரிப்பு
Local
06 July 2026
நீர்கொழும்பிலிருந்து 650 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!
Local
06 July 2026
மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!
Local
06 July 2026
500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு!
Local
06 July 2026
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமனம்!
Local
06 July 2026
71 வயதான ஜாக்கி ஜான் எடுத்த அதிரடி முடிவு : இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிக்கக் காத்திருக்கும் இரகசியப் பாடல்!
Local
06 July 2026