General18 August 2026

நீர்கொழும்பிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை

நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, புதன்கிழமை (19) மாலை 5:30 மணி வரை அமுலில் இருக்கும்.

பாதிக்கப்பட்ட கடற்பரப்புகளில் 2.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேருவலையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த பகுதிகளில் செயற்படும் கடற்படையினரும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes