Sports14 August 2026

டிக்வெல்லவின் மீள்வருகை - பின்னணி காரணத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா

இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல சேர்க்கப்பட்டதற்கான பின்னணி காரணங்களை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனையுடன் தலைவர் தனஞ்சய டி சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தனஞ்சய டி சில்வா, ஆரம்பத்தில் குசல் மெண்டிஸ் இலக்கம் 7 இல் களமிறக்கப்பட்டதால் டிக்வெல்ல அணியில் சேர்க்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், குசல் மெண்டிஸ் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, டிக்வெல்ல மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"காலி மைதானத்தில் விளையாடும் போது, மிகச்சிறந்த விக்கெட் காப்புத் திறன் கொண்ட ஒருவரைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தெரிவாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

விக்கெட் காப்புத் திறனைக் கருத்திற் கொள்ளும்போது டிக்வெல்ல முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்."

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (15) காலியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes