General11 December 2025

அதிவேக நெடுஞ்சாலையில் குப்பையை வீசிய ஓட்டுநர் கைது

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் குப்பைப் பையை வீசியதற்காக 35 வயது சிற்றூர்தி ஓட்டுநர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட 19 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் சந்தேகநபர் குப்பைப் பையை வீசிச் செல்வதை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகள் கண்டனர். 
 
வீதியில் கழிவுகளைக் கொட்டியதற்காக தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். 
 
யாழ்ப்பாணத்தில் உள்ள அல்வாயைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நாளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes