General30 April 2026

ஈரானின் 80% ஏவுகணை நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஈரானின் கடற்படை, வான் படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமெரிக்கா முற்றாக அழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் தற்போதைய இராணுவ நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

இதன்போது "ஈரானிடம் தற்போது மிகக் குறைந்த அளவிலான இராணுவ பலமே எஞ்சியுள்ளது. அவர்களிடம் மிகச்சிறிய அளவிலான ஏவுகணைகளே உள்ளன" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களில் சுமார் 80 சதவீதமானவை அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்பதை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

"அவர்களுக்கு அது தெரியும், அதேபோல் மற்ற அனைவருக்கும் அது தெரியும்" என்று அவர் கூறினார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் வலிமையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes