General30 April 2026

ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi) மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
 
ஈரான் - அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் குறித்த தற்போதைய முன்னேற்றங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு சூழல்கள், ஒருங்கிணைந்த செயல்பாடு என்பவை தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 90 சதவீத எரிவாயு இறக்குமதி இந்த வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று இந்த உரையாடலின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள BRICS அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாகவும் இந்த உரையாடல் பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும், சுதந்திரமான கடல்சார் வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ள இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes