International01 May 2026

டிஜே இசையால் 140 உயிர்கள் பலி!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் ஒலிக்கப்பட்ட அதீத சத்தத்துடனான டிஜே(DJ)இசையினால், பண்ணையில் இருந்த 140 கோழிகள் உயிரிழந்ததாகப் பண்ணை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட திருமண ஊர்வலம் ஒரு கோழிப்பண்ணையைக் கடந்து சென்றபோது, அங்கிருந்த டிஜே கருவியில் இருந்து மிக அதிக அளவிலான ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த அதீத சத்தத்தைத் தாங்க முடியாமல் பண்ணைக்குள் இருந்த கோழிகள் நிலைகுலைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பண்ணை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஜே ஆபரேட்டர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சத்தத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியதா என்பது குறித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes