கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைகளில் PET ஸ்கேன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், புற்றுநோய் நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
PET ஸ்கேன் செய்வதற்கு அவசியமான கதிரியக்கப் பொருளுக்கு (Radioactive tracer) ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் விநியோகஸ்தர்களை பதிவு செய்வதில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு மேற்கொண்ட தாமதம் காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த மார்ச் 27 முதல் தேவையான பொருள் நாட்டில் கிடைக்கவில்லை.
புற்றுநோய் செல்களை துல்லியமாகக் கண்டறிதல், அவற்றின் செயற்பாட்டை மதிப்பிடுதல், நோய் பரவியுள்ள எல்லையைத் தீர்மானித்தல் மற்றும் சிகிச்சையின் செயற்திறனை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் PET ஸ்கேன் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது குறித்து தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு முறையான பதிவு இல்லாமலேயே இந்த பொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஆண்டு முதல் அனைத்து விநியோகஸ்தர்களையும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.
பதிவு செய்வதற்குத் தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்கள் கோரப்பட்ட போதிலும், அந்த விவரங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போது விநியோகஸ்தர்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய இரசாயனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விஜயவிக்கிரம தெரிவித்தார்.
அதன்படி, தேவையான பொருள் விரைவில் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
PET ஸ்கேன் செய்வதற்கு அவசியமான கதிரியக்கப் பொருளுக்கு (Radioactive tracer) ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்தச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் விநியோகஸ்தர்களை பதிவு செய்வதில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு மேற்கொண்ட தாமதம் காரணமாகவே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த மார்ச் 27 முதல் தேவையான பொருள் நாட்டில் கிடைக்கவில்லை.
புற்றுநோய் செல்களை துல்லியமாகக் கண்டறிதல், அவற்றின் செயற்பாட்டை மதிப்பிடுதல், நோய் பரவியுள்ள எல்லையைத் தீர்மானித்தல் மற்றும் சிகிச்சையின் செயற்திறனை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் PET ஸ்கேன் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது குறித்து தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு முறையான பதிவு இல்லாமலேயே இந்த பொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஆண்டு முதல் அனைத்து விநியோகஸ்தர்களையும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.
பதிவு செய்வதற்குத் தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்கள் கோரப்பட்ட போதிலும், அந்த விவரங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போது விநியோகஸ்தர்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய இரசாயனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விஜயவிக்கிரம தெரிவித்தார்.
அதன்படி, தேவையான பொருள் விரைவில் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Latest News
புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போராடும் டெல்லி... சொந்த மண்ணில் மிரட்ட காத்திருக்கும் ராஜஸ்தான்
Local
01 May 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட 3 என்புக்கூடு எச்சங்கள்
Local
01 May 2026
அணில் அட்டகாசம்: பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் - பீதியில் மாணவர்கள்!
Local
01 May 2026
அதிமுகவுடன் இணைகிறதா விஜய்யின் தவெக - கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?
Local
01 May 2026
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
Local
01 May 2026
மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
Local
01 May 2026
ஐக்கிய அரபு இராச்சியம் முதல் அமெரிக்கா வரை இந்த மாம்பழத்துக்கு இவ்வளவு மவுசா?
Local
01 May 2026
ஈரானுடன் மீண்டும் போர்: இஸ்ரேலில் வலுக்கும் கோரிக்கை - இராணுவத் தளமாக மாறும் நாடு!
Local
01 May 2026
ஈரானில் மீண்டும் ஆரம்பமான வானூர்தி சேவைகள்: 58 நாட்களுக்குப் பிறகு இமாம் கொமெய்னி வானூர்தி நிலையம் திறப்பு!
Local
01 May 2026
"பொய்கள் போதாதென்று திருட்டுகளும்": தற்போதைய அரசைச் சாடிய ரணில் விக்ரமசிங்க
Local
01 May 2026