General04 June 2026

ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

ஹொரண - படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்கப்பட்ட முதியவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்ட 51 பேர் தற்போது படகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (03) பிற்பகல் இந்த முதியோர் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான முதன்மைக் காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes