International08 June 2026

7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவை சென்றடைந்துள்ளார்.

ஷி ஜின்பிங் பியோங்யாங்கை வந்தடைந்துள்ளதாக, சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவா செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் பலன்களை வழங்குவதற்கு ஈடாக, வடகொரியா மீதான சீனாவின் தனித்துவமான செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் வடகொரியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமான இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, ஜனாதிபதி ஷி ஜின்பிஙை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னைச் சந்திக்கவுள்ளார்.

இந்த பயணத்திற்கான குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்காவுடனான தனித்தனி மோதல்களை எதிர்கொள்ளும் வேளையில், தங்களின் பாரம்பரியக் கூட்டணியை முழுமையாக மீட்டெடுக்க இரண்டு நாடுகளும் முயற்சித்து வருவதால், இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவுகளிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes