இலங்கை அதிபர் சேவையில் உள்ள அதிகாரிகளின் ஆரம்ப வேதனம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன் இது தொடர்பான புதிய சுற்றறிக்கை (எண் 03/2014 (I)) வெளியிடப்பட்டுள்ளது.
இது முன்னைய 03/2014 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின் முதலாவது பகுதியையும் அதன் உப பிரிவுகளையும் மாற்றியமைத்துள்ளது.
கடந்த மே 11, 2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்பட்டது.
நீண்டகாலமாக அதிபர்களால் முன்வைக்கப்பட்டு வந்த வேதன முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில், அதிபர்களின் சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் கணக்கிடப்படும்.
இலங்கை அதிபர் சேவையின் தரம் III-க்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகள், தரம் I வரை பதவி உயர்வு பெறுவதற்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்களுக்கு 2027 டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சேவை அமைப்பின் விதிகளுக்கு அமையவும், பதவி உயர்வுச் செயல்பாட்டில் அதிபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கிலும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Latest News
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிளன் அல்பின் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026
முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியீடு
Local
10 June 2026
முதலிடத்திற்கு முன்னேறிய ஹரி புரூக் - ஐசிசி தரவரிசையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
2030ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி
Local
10 June 2026