உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் அளுத்கம நகரில் நடாத்தப்பட்டு வந்த இரண்டு பாலியல் தொழில் விடுதிகளை களுத்துறை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இம்முற்றுகையின் போது அதன் முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அளுத்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளுத்கம நகரப் பகுதியில் நேற்று (9) இரவு இந்த இரண்டு முற்றுகைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் 57 வயதுடைய அளுத்கம பகுதியைச் சேர்ந்த விடுதியின் முகாமையாளரும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 23 முதல் 43 வயதிற்கு இடைப்பட்ட 12 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்கள் தல்கஸ்வல, மத்தக, எல்பிட்டிய, கிரியெல்ல, நவந்துடுவ, உடகரவிட்ட, வாத்துவ, மொரட்டுவ, பதுளை, மாஸ்பொத, நுவரெலியா மற்றும் பிபில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் மற்றும் பெண்கள் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அளுத்கம காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
ஹொரணை அரச வங்கி கொள்ளைச் சம்பவம் - பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Local
11 June 2026
ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
11 June 2026
அரசாங்க அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய பதப்படுத்தப்பட்ட மீன் தொழிற்சாலை முற்றுகை
Local
11 June 2026
ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து - பணிப்பாளருக்கு பிணை!
Local
11 June 2026
பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் - இரு சீனப்பிரஜைகளுக்கு மரணதண்டனை
Local
11 June 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: முக்கிய சந்தேகநபர் கைது
Local
11 June 2026
சுரேஷ் சலேயின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு
Local
11 June 2026
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
Local
11 June 2026
தரமற்ற பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Local
11 June 2026