வீட்டுப் பணியை கண்ணியமான ஒரு தொழிலாக மாற்றுவதற்காக, ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C189 உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுடன் சரியாக 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், இலங்கையில் வீட்டுப் பணியாளர்களின் நிலைமை இன்னும் பாரதூரமான அவல நிலையிலேயே காணப்படுவதாக 'புரொடெக்ட்' சங்கம் (PROTECT Union) விசேட அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம் வீட்டுப் பணியாளர்களுக்குக் குறிப்பிட்ட வேலை நேரம், நியாயமான ஊதியக் கட்டமைப்பு, வேதனத்துடனான விடுமுறை மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) / ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) போன்ற சமூகப் பாதுகாப்பு வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகள் இந்த உடன்படிக்கையைத் தங்களது சட்டக் கட்டமைப்பில் இணைத்துக் கொண்டுள்ள போதிலும்,2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஆட்சியாளரோ அல்லது தொழில் அமைச்சோ அதனை உள்நாட்டுச் சட்டமாக மாற்றுவதற்குத் தவறியுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள EPF மற்றும் ETF சட்டங்களிலிருந்தும், 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்திலிருந்தும் வீட்டுப் பணியாளர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், குறிப்பிட்ட வேலை நேரம் அல்லது வேதனத்துடனான விடுமுறைகள் மறுக்கப்பட்டுள்ளதோடு, வயோதிபக் காலத்தில் எவ்வித ஆதரவும் இன்றி அநாதரவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் கூறுகிறது.
"தேர்தல் மேடைகளில் கூறப்பட்ட அழகான கதைகள் அல்ல, அவற்றை நடைமுறையில் சான்றாதாரமாகச் செய்து காட்டுவதே எங்களுக்கு இப்போது தேவையாகவுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த, தொழிலாளர்களைப் பற்றிச் சிந்திக்கும் ஓர் அரசாங்கம் என்பதையும், ஜனாதிபதி அன்று கூறியது பொய் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுமாயின், தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களையும் உள்வாங்கிக் காட்ட வேண்டும்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டுப் பணியாளர்களுக்கான தொழிலாளர் சட்டங்களை உருவாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அது ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், அந்த வாக்குறுதிகள் பலமுறை பொய்யாகியுள்ளதால், வீட்டுப் பணியாளர்கள் இந்தத் திட்டங்களை அது யதார்த்தமாகும் போது மட்டுமே நம்புவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலம் தொட்டே ஆட்சியாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்குவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வந்துள்ளதாகக் குற்றம் சுமத்தும் 'புரொடெக்ட்' சங்கம், சிறுவர் வீட்டுப் பணியாளர்களாகச் சேவையாற்றிய போது உயிரிழந்த இஷாலினி, ரமணி மற்றும் வெலிக்கடை காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்த ஆர்.ராஜகுமாரி போன்ற சகோதரிகளின் மரணங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம் வீட்டுப் பணியாளர்களுக்குக் குறிப்பிட்ட வேலை நேரம், நியாயமான ஊதியக் கட்டமைப்பு, வேதனத்துடனான விடுமுறை மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) / ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) போன்ற சமூகப் பாதுகாப்பு வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகள் இந்த உடன்படிக்கையைத் தங்களது சட்டக் கட்டமைப்பில் இணைத்துக் கொண்டுள்ள போதிலும்,2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஆட்சியாளரோ அல்லது தொழில் அமைச்சோ அதனை உள்நாட்டுச் சட்டமாக மாற்றுவதற்குத் தவறியுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள EPF மற்றும் ETF சட்டங்களிலிருந்தும், 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்திலிருந்தும் வீட்டுப் பணியாளர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், குறிப்பிட்ட வேலை நேரம் அல்லது வேதனத்துடனான விடுமுறைகள் மறுக்கப்பட்டுள்ளதோடு, வயோதிபக் காலத்தில் எவ்வித ஆதரவும் இன்றி அநாதரவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் கூறுகிறது.
"தேர்தல் மேடைகளில் கூறப்பட்ட அழகான கதைகள் அல்ல, அவற்றை நடைமுறையில் சான்றாதாரமாகச் செய்து காட்டுவதே எங்களுக்கு இப்போது தேவையாகவுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த, தொழிலாளர்களைப் பற்றிச் சிந்திக்கும் ஓர் அரசாங்கம் என்பதையும், ஜனாதிபதி அன்று கூறியது பொய் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுமாயின், தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களையும் உள்வாங்கிக் காட்ட வேண்டும்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டுப் பணியாளர்களுக்கான தொழிலாளர் சட்டங்களை உருவாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அது ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், அந்த வாக்குறுதிகள் பலமுறை பொய்யாகியுள்ளதால், வீட்டுப் பணியாளர்கள் இந்தத் திட்டங்களை அது யதார்த்தமாகும் போது மட்டுமே நம்புவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலம் தொட்டே ஆட்சியாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்குவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வந்துள்ளதாகக் குற்றம் சுமத்தும் 'புரொடெக்ட்' சங்கம், சிறுவர் வீட்டுப் பணியாளர்களாகச் சேவையாற்றிய போது உயிரிழந்த இஷாலினி, ரமணி மற்றும் வெலிக்கடை காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்த ஆர்.ராஜகுமாரி போன்ற சகோதரிகளின் மரணங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தயா புஷ்ப குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
16 June 2026
கொலன்னாவ வெள்ளப் பாதிப்பு மற்றும் குழாய் வழிக் குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகள் : அமைச்சரவை அதிரடி முடிவு!
Local
16 June 2026
ஹேக்கர்கள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டால் ஹர்ஷ டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படுவார்: ஆளுந்தரப்பு அச்சுறுத்துவதாக அஜித் பி. பெரேரா அம்பலம்
Local
16 June 2026
பாரம்பரிய ஊடகங்களை முந்திய சமூக வலைதளங்கள்: அதிர்ச்சி அறிக்கை!
Local
16 June 2026
முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்துக்கு!
Local
16 June 2026
அரசிறைப் பாதுகாப்புக் கட்டளைகளுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம்: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை சம்மதம்
Local
16 June 2026
டிட்வாவினால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட திட்டம்: 200 டொலருக்கு அமைச்சரவை அனுமதி!
Local
16 June 2026
EPF மற்றும் ETF நிதியங்களை முத்தரப்புப் பேரவையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை
Local
16 June 2026
126 பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
Local
16 June 2026
டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புனித தலங்களை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: 90 இடங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு
Local
16 June 2026