இலங்கை காவல்துறை சேவையில் பெண் காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது, தகுதிபெற்ற பெண் விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் விண்ணப்பதாரர்களுடன் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது, ஆரம்ப மற்றும் எழுத்துப் பரீட்சைகளில் சித்தியடைந்து, கைரேகை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளிலும் சித்தியடைந்த பெண் விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பரிசோதனைகள் திட்டமிட்டபடி நடத்தப்படாமல் பிற்போடப்பட்டன.
இதன் காரணமாக, இன்றுவரை அவர்களுக்கு நியமனங்களை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளனர்.
இதன் காரணமாக, இன்றுவரை அவர்களுக்கு நியமனங்களை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளனர்.
தற்போது இந்த 2021 ஆம் ஆண்டு வர்த்தமானியை இரத்து செய்துவிட்டு, 2026 ஆம் ஆண்டின் புதிய வர்த்தமானியின் ஊடாக வயது எல்லையை மாற்றி, கல்வித் தகைமைகளை அதிகரித்து, புதிய பெண் காவல்துறை கான்ஸ்டபிள்களை நியமிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.
இதனால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நியமனங்கள் இன்றி தவிக்கும் இந்த தகுதிவாய்ந்த பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் என்ன என்பதை அறிய வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
2160 மற்றும் 2163 ஆகிய வர்த்தமானி அறிவித்தல்களில் உள்ள பெண் விண்ணப்பதாரர்களை இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தலின் கீழ் உள்வாங்குவதற்கும், 2021 ஆம் ஆண்டின் 2215 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் விண்ணப்பித்த பெண் விண்ணப்பதாரர்களை இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையிலிருந்து நீக்கிவிட்டு, இருவேறு விதமாகச் செயற்படுவதானது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Latest News
பசி, இருள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலை வழங்குவார்கள்! – ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை
Local
19 June 2026
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026
அரசுக்கு 1.4 கோடி நட்டம்: கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
Local
19 June 2026
சட்டசபையில் காரசார விவாதம் - இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்
Local
19 June 2026
"யுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை"
Local
19 June 2026
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!
Local
19 June 2026