General19 June 2026

பசி, இருள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலை வழங்குவார்கள்! – ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை

முன்னாள் அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தனது பழைய பழகிய பாணியில் நாடகங்களை அரங்கேற்றி, மக்களின் மனங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

"கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் பழையபடி நாடகங்களை காட்டி, மக்களின் சிந்தனையை திசைதிருப்ப தயாராகி வருகிறது.

இருப்பினும், மக்களுக்கு பசி ஏற்படும் போதும், மின்சாரம் இன்றி இருளில் வாழும் நிலை வரும் போதும், வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் போதும் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்.

அவ்வாறு மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் போது, இந்த அரசாங்கத்திற்கு அவர்கள் தகுந்த மற்றும் சரியான பதிலை எதிர்வரும் காலத்தில் வழங்குவார்கள்" என அவர் எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes