காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதோடு, அவர்களது வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒரு முடிவைக் காண வேண்டியது அவசியம் என, நீதித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடுகள் காரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மற்றும் கடந்த அரசுகளின் செயற்பாடுகள் குறித்து மக்களிடம் வேதனையும் அதிருப்தியும் இருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசுகள் இந்த விசாரணைகளை நிறைவு செய்ய போதிய அக்கறை காட்டாமையால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கும் தெற்கும் முப்பது ஆண்டுகால யுத்தத்தால் பெரும் துயரங்களை அனுபவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனி ஒருபோதும் அவ்வாறான நிலை உருவாகக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதற்காக நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வடக்கில் நிலங்கள் விடுவிக்கும் பணிகளும் வீதி திறப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற உணர்வை இனி ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Latest News
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
20 June 2026
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!
Local
20 June 2026
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: ஜனாதிபதி செயலணியை உடனடியாக அமைக்குமாறு GMOA கோரிக்கை!
Local
20 June 2026
நெடுந்தீவில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர் நாகபட்டினத்தில் உடலமாகக் மீட்பு: இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!
Local
20 June 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளுக்கு விரைவில் முடிவு: அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதி!
Local
20 June 2026
சுங்கத்தில் காகிதப் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி!
Local
19 June 2026
2025 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Local
19 June 2026
நீதி அமைச்சர் விஜயம் செய்த நாளில் செம்மணியில் மேலும் 7 என்புக்கூடுகள்!
Local
19 June 2026
துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!
Local
19 June 2026
பசிலுக்கான பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
Local
19 June 2026