General21 June 2026

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: 263 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகள் கண்டறிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 45,756 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதுடன், நாடு முழுவதும் டெங்கு பரவும் அபாயம் கொண்ட சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலைகளில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நடப்பு ஆண்டில் இதுவரை 633 பாடசாலைகள் விசேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகளின் போது, 263 பாடசாலை வளாகங்களில் நுளம்புக் குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலைகள் தவிர, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவையும் நுளம்புகள் பெருகும் பொதுவான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes