General23 June 2026

பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை

காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மனித உரிமை அமைப்புகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்த அல்லது குறைக்க நிர்பந்திக்கப்படுவதால், பாலஸ்தீன சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாக ஐநா குழு ஒன்று எச்சரித்துள்ளது.

இராணுவத் தாக்குதல்கள், பயணத் தடைகள், தடைகள் மற்றும் கைது அச்சுறுத்தல்கள் மூலம் மனித உரிமை அமைப்புகளின் பணிகளை முடக்குவதற்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சிகளை ஐநா குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த அமைப்புகள் இல்லாத பட்சத்தில், பாலஸ்தீன சிறுவர்களுக்கான பாதுகாப்பு மேலும் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமை அமைப்புகளின் முடக்கம் காரணமாக, சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் எவ்வித தடையுமின்றி தொடரக்கூடிய அபாயம் உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes