General23 June 2026

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!

ஹோர்முஸ் நீரிணை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

லெபனான் நிலப்பரப்புகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டு, கடந்த சனிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.

ஈரானியத் தரப்பு தகவல்களின்படி, தற்போது ஹோர்முஸ் நீரிணையூடான போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த விவகாரத்தில் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes