General23 June 2026

சுரேஷ் சலேயின் தாயார் திருத்தந்தைக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தாயாரான கிளோடியா சலே, திருத்தந்தை 14ஆம் லியோவுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சுரேஷ் சலே தொடர்பாக நீதி, மனித கௌரவம் மற்றும் கருணை அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரியே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கடிதம் இலங்கையிலுள்ள திருத்தந்தையின் பிரதிநிதியான அப்போஸ்தலிக்க நுன்சியோ (Apostolic Nuncio) ஆயரிடம் கொடுப்பதற்காக , கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes