General04 July 2026

இணையவழி கையடக்கத் தொலைபேசி வியாபார மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

விற்பனைக்குரிய பொருள் உங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமில்லாத நபர்களின் வங்கித் கணக்குகளுக்குப் பணத்தை வைப்பிலிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தத்தமது பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்கி ஏமாறாமல் இருப்பதற்கு, பொருள் கிடைத்த பின்னர் பணத்தைச் செலுத்தும் (Cash on Delivery) முறையை மாத்திரம் பயன்படுத்துமாறு மேலும் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes