General05 July 2026

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் மற்றும் சூழல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் இது குறித்த தகவல்களை வழங்க முடியும் என 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குப் பக்கபலமாக, பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes