International05 July 2026

கனடா எட்மன்டனில் சந்தேகத்திற்கிடமான மரணம் : தப்பியோடிய கறுப்பு நிற வாகனம் குறித்து காவல்துறையினர் விசாரணை!

கனடா எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து எட்மன்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று காலை 6:30 மணியளவில் ஆயுத தாக்குதல் தகவல் கிடைத்ததை அடுத்து, டவுன்டவுன் ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒருவர், அவசர மருத்துவ உதவிப் பிரிவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமை நடத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் கறுப்பு நிற வாகனம் தொடர்பான விபரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes