நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் சிறப்புரிமைகள் குறித்தும், தம்மைக் காண வரும் விவசாய பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று (07) சபையில் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற அமர்வின் போது சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்,
"எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சிறப்புரிமைகள் இருக்கின்றன. என்னை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த விவசாய மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பது அதில் ஒரு முக்கிய சிறப்புரிமையாகும். ஆனால், இன்று அவர்கள் என்னை நாடாளுமன்றத்தில் சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடை செய்ய முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அந்தச் சிறப்புரிமைகள் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவானது எனக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்நிலைமை என்றால் அது முற்றிலும் தவறானது என்றும், இதற்கு எதிராகத் தாங்களும் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
" சபாநாயகர் அவர்களே, அவ்வாறு தடுத்தது யார் என்று பெயரைக் குறிப்பிடச் சொல்லுங்கள். அது முற்றிலும் தவறான செயல். எதிர்க்கட்சித் தலைவருக்காக நாங்களும் குரல் கொடுப்போம். யார் அவ்வாறு செய்தது? அதிகாரிகள் தரப்பா?" என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்,
நாளை (08) நாடாளுமன்றக் குழு அறையில் (Committee Room) தம்மைச் சந்திப்பதற்காக 'விவசாய கூட்டு முன்னணி' உள்ளிட்ட 42 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தரவிருந்ததாகக் குறிப்பிட்டார்.
நாளை (08) நாடாளுமன்றக் குழு அறையில் (Committee Room) தம்மைச் சந்திப்பதற்காக 'விவசாய கூட்டு முன்னணி' உள்ளிட்ட 42 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தரவிருந்ததாகக் குறிப்பிட்டார்.
"நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு அனுமதிப் பத்திரம் (Pass) பெறப்பட வேண்டும், வெறுமனே வருகை தர முடியாது என்பது உண்மைதான்.
ஆனால், 42 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளைய தினம் என்னை நாடாளுமன்றக் குழு அறையில் சந்திப்பதற்கான அனுமதியைக் கோரியபோது, அந்த அனுமதியை வழங்கும் இடத்தில்தான் அதிகாரிகள் தரப்பால் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் வர முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது," என்று எதிர்க்கட்சித் தலைவர் சபையில் விளக்கமளித்தார்.
ஆனால், 42 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளைய தினம் என்னை நாடாளுமன்றக் குழு அறையில் சந்திப்பதற்கான அனுமதியைக் கோரியபோது, அந்த அனுமதியை வழங்கும் இடத்தில்தான் அதிகாரிகள் தரப்பால் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் வர முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது," என்று எதிர்க்கட்சித் தலைவர் சபையில் விளக்கமளித்தார்.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 734 கைதிகள் இடமாற்றம்; பிணைச் சட்டத்தில் அவசர திருத்தம் கொண்டுவர நடவடிக்கை – நீதி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பு
Local
07 July 2026
"AI காரணம் இல்லை" : 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசொப்ட் அளித்த அதிரடி விளக்கம்!
Local
07 July 2026
மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட 5 தனியார் பேருந்துகள் பறிமுதல்
Local
07 July 2026
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சென்னையில் கலந்துரையாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த அதிகாரிகளைச் சந்தித்த நீதி அமைச்சர்
Local
07 July 2026
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் சேதம்: சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை முடக்க திட்டமிட்ட சதி!
Local
07 July 2026
எல்லீஸ் பெர்ரியின் வரலாற்றுச் சாதனை : அதிக ICC கிண்ணங்களை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்!
Local
07 July 2026
நாடாளுமன்றத்திற்குள் விவசாய அமைப்புகள் வரத் தடையா? சபை நடுவே எதிர்க்கட்சித் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையே காரசார விவாதம்!
Local
07 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 11 நாட்களாக வெறும் கைகளால் தேடி மகளின் உடலத்தை மீட்ட தந்தை!
Local
07 July 2026