நாட்டில் இடம்பெறும் புதையல் தோண்டல் மற்றும் தொல்பொருள் திருட்டுகளுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தின் நேரடித் தலைமைத்துவமும் ஆதரவும் இருப்பதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று களஆய்வு செய்ததாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் , அங்கு பரவலாகப் புதையல் தோண்டப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இன்றி இவ்வாறான பாரிய குற்றங்கள் தன்னிச்சையாக நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இன்றி இவ்வாறான பாரிய குற்றங்கள் தன்னிச்சையாக நடக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் புதையல் தோண்டும் இந்த மோசமான கலாச்சாரம் 1990-களில்தான் நாட்டில் ஆரம்பமானதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் (DIG) கூட இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டமையை அவர் நினைவூட்டினார்.
நாட்டின் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மற்றும் புதையல் திருட்டுகள் குறித்துப் பேசும்போது, இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தில் இருந்த இரு பிரதான குடும்பங்களின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 'பிரேமதாச' மற்றும் 'ராஜபக்ச' ஆகிய இரு குடும்பங்களின் பெயர்களையும் அவர் சபையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 'பிரேமதாச' மற்றும் 'ராஜபக்ச' ஆகிய இரு குடும்பங்களின் பெயர்களையும் அவர் சபையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான தொல்பொருள் விவகாரங்களில் இருந்து அரசியல் தலையீடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், தேசிய சொத்துக்களைப் பாதுகாத்து மக்களின் உரிமைகளை மக்களிடமே ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Latest News
எம்.பிக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்
Local
07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!
Local
07 July 2026
"அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு எங்கே?" – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது சாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து முன்கூட்டிய உளவுத் தகவல் கிடைத்ததா?
Local
07 July 2026
யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்
Local
07 July 2026
புதையல் திருட்டுக்கு பின்னால் அரசியல் பின்னணி": பிரேமதாச, ராஜபக்ச குடும்பங்கள் குறித்து சபையில் குற்றச்சாட்டு!
Local
07 July 2026
நாடாளுமன்றில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குழுவிலிருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு அர்ச்சுனா கோரிக்கை!
Local
07 July 2026
ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் மரணம்!
Local
07 July 2026
விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
Local
07 July 2026