General08 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வெலிக்கடையில் கண்ணீர் அஞ்சலி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையாற்றிய நிலையில், மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்கள் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அங்கு பெரும் சோகமும் கண்ணீரும் சூழ்ந்திருந்தது.

ஒரே சீருடை அணிந்து, ஒரே நோக்கத்தில் இணைந்து பணியாற்றிய தங்கள் சக ஊழியர்களின் உடலங்களைக் கண்ட அவர்களின் நண்பர்கள் மற்றும் சக அதிகாரிகள், கதறி அழுத காட்சி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கள் இறுதி மூச்சு வரை கடமைக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, சீருடைக்கும் அந்த அடையாளத்திற்கும் உரிய கௌரவத்தைச் சேர்த்த இந்த வீரம் மிக்க அதிகாரிகள், பணியின் போது உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

"நீங்கள் இன்று எம்மிடையே இல்லாவிட்டாலும், எங்கள் இதயங்களில் என்றும் நீங்காது வாழ்வீர்கள்" என சக அதிகாரிகள் கண்ணீருடன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

இன்று காலை (08) இடம்பெற்ற இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Related recommendation
Hiru TV News | Programmes