General13 July 2026

இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 601 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 68,672 டெங்கு நோயார்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் மேல் மாகாணத்திலேயே, அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 36,118 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,112 டெங்கு நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 13,791 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேநேரம், டெங்கு காய்ச்சலினால் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes