General13 July 2026

விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இளவரசரின் 2016 ஆம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இன்றைய தினம் (13) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சாட்சி விசாரணைகளை செப்டம்பர் மாதத்தில் முன்னெடுக்க மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி மருத்துவ அறிக்கையையொன்றைச் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக குறித்த வழக்கு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes