General13 July 2026

"அரசாங்கத்தை சோதிக்கக் கொடுத்தோம்; இன்னும் 3 ஆண்டுகளில் உண்மை வெளிப்படும் " – திலும் அமுனுகம அதிரடி!

தற்போதைய அரசாங்கத்தை மக்கள் சோதனை செய்து பார்ப்பதற்கே ஆட்சியை ஒப்படைத்துள்ளதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அவர்களின் உண்மை நிலை முழுமையாக வெளிப்படும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

தற்போது இந்த அரசாங்கத்தை மக்கள் சோதனை செய்து பார்ப்பதற்காகவே ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏன் அவ்வாறு கொடுக்கப்பட்டது என்றால், இல்லாவிட்டால் கடந்த 76 ஆண்டுகால சாபம் என்று கூறுவதைப் போல, இன்னும் ஒரு 76 ஆண்டுகளுக்கு இதையேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

'எங்களிடம் ஆட்சியைக் கொடுத்திருந்தால் நாங்கள் இதைவிட மிகச் சிறப்பாகச் செய்திருப்போம்' என்று அவர்கள் தொடர்ந்து கதை பேசிக்கொண்டே இருந்திருப்பார்கள்.

ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தின் மீதமுள்ள மூன்று ஆண்டுகள் போகும்போது, அவர்கள் சோதிக்கப்பட்ட விதம் மக்களுக்கு நன்றாகவே புரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes