International14 July 2026

வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் பொதுமக்கள்!

இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் உருவான பனிக்கட்டி சிவலிங்க வடிவில் இருப்பதாகக் கருதி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

குறித்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் படிந்திருந்த பனிக்கட்டி, சிவலிங்கத்தை ஒத்த வடிவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் அந்த வீட்டிற்குச் சென்று பனிக்கட்டிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes