General18 July 2026

10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 237 கிராம் போதைப்பொருளுடன், வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes