International22 July 2026

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் "வெறித்தனமாக" விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஈரானிய அணுசக்தி தளத்தை "மிகக் கடுமையாக" தாக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து 10வது இரவாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களுககு பதிலாக, குவைத்தில் உள்ள நன்னீராக்கும் ஆலை மற்றும் மின் நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் பகுதிகளிலும் எதிரொலித்துள்ளன.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில்; "பாதுகாப்பற்ற பாதையைப் பயன்படுத்திய இரண்டு எரிபொருள் கப்பல்களில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேலிய படைகள் விலகியதைத் தொடர்ந்து தெற்கு லெபனானின் சவ்தார் அல்-கர்பிஹ் நகரில் தங்களது படை வீரர்களை களமிறக்கத் தொடங்கியுள்ளதாக லெபனான் இராணுவம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes