General23 July 2026

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய படகொன்றுடன், 9 இந்திய கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து இந்த கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

இரணைதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த கடற்றொழிலாளர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.

கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes