International28 July 2026

சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்

சவூதி அரேபியாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களுக்கு ஓமான் அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதன்படி சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதாக ஓமான் செய்திச் சேவை (Oman News Agency) அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன், சவூதி அரேபியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஓமான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் இருந்து விலகியிருக்குமாறும் ஓமான் அரசு வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes