General28 July 2026

ஹொரணை மருத்துவமனையில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை காவல்துறைப் பிரிவின் உத்தியோகத்தர் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

சிகிச்சை பிரிவில் மருத்துவருடன் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, அவரை வெளியேறுமாறு கூறிய காவல்துறை உத்தியோகத்தரின் தலையில் குறித்த நபர் தாக்கியுள்ளதுடன், அதைத் தடுக்க வந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தள்ளிவீழ்த்திவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தப்பியோடிய புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹொரணை தலைமையகக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes