தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழா 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னரே மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழைத் தாயாகப் போற்றும் தமிழக மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது, இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
"வந்தே மாதரம் எனும் மதச்சார்புக் கொண்ட பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும்" என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்லேக்கர் அழுத்தத்தின் பேரில் இது நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும் கூட, அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கை பார்க்கும் தமிழக வெற்றிச் கழக அரசாங்கத்தின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்" என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
அத்துடன், "கொள்கை எதிரி என மேடையில் அறிவித்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாகத் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்" என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
Latest News
பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி
Local
31 July 2026
கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!
Local
31 July 2026
போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை: விரைந்தது நேட்டோ
Local
31 July 2026
மூன்று முக்கிய கடல் வழிகளில் ஏற்பட்ட தடையால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்து
Local
31 July 2026
ஸ்பெயினின் தியூட்டா பகுதிக்குள் குடியேறுபவர்கள் பெருமளவு வருகை: மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என தலைவர் எச்சரிக்கை!
Local
31 July 2026
இந்தியாவில் முன்பதிவில் புதிய சாதனை படைத்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' – முதல் நாளிலேயே ₹45 கோடி வசூல்!
Local
31 July 2026
அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஈரானிய புரட்சிக்கர காவல் படை!
Local
31 July 2026
ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானம்!
Local
30 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: தேசிய பாதுகாப்பை கருதி சாட்சிய விவரங்களை வெளியிடத் தடை
Local
30 July 2026
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை – ஆபத்தில் இலட்சக்கணக்கான மக்கள்
Local
30 July 2026