தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழா 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னரே மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழைத் தாயாகப் போற்றும் தமிழக மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது, இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
"வந்தே மாதரம் எனும் மதச்சார்புக் கொண்ட பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும்" என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்லேக்கர் அழுத்தத்தின் பேரில் இது நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும் கூட, அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கை பார்க்கும் தமிழக வெற்றிச் கழக அரசாங்கத்தின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்" என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
அத்துடன், "கொள்கை எதிரி என மேடையில் அறிவித்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாகத் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்" என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
Latest News
வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை!
Local
29 July 2026
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30) அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது. ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும் உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
Local
29 July 2026
இலங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்க ஆவல் : நடிகர் விஜய் ஆனந்த் உற்சாகம்!
Local
29 July 2026
கம்பளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
Local
29 July 2026
20.6 பில்லியன் டொலரைத் தொட்ட ஐ.பி.எல் வணிக மதிப்பு - முதலிடத்தில் தெறிக்கவிடும் ஆர்.சி.பி!
Local
29 July 2026
தனுஷின் 'ஓம்' படப் பாடலில் அரசியல்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வரிகள்!
Local
29 July 2026
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
Local
29 July 2026
தனுஷின் அரசியல் பிரவேசம் : பாரம்பரியக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியா? - விஜய்யின் ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு
Local
29 July 2026
12 ஆவது மாடியில் இருந்து பூனையைத் கீழே தள்ளிவிட்ட நபர்: சமூக வலைதளங்களில் கொந்தளிப்பும், வழக்கும்
Local
29 July 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார் - நாமல் அதிரடி
Local
29 July 2026