2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படக்கூடும் என அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பஞ்சம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு (FEWS NET) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை மேலும் சவாலானதாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நகர்ப்புற வேலைவாய்ப்புகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உணவுப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
இந்த அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வருமானம் உயராததால், குடும்பங்களின் பொருளாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் காரணமாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உணவின் அளவையும், நாளாந்த உணவு வேளைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈர வலய பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குடும்பங்கள், அதேபோல் நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் வறிய மக்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், போக்குவரத்து செலவுகள் மற்றும் விவசாய உற்பத்திக்கான உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதம் வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான அவசர மனிதாபிமான உணவு உதவித் திட்டங்கள் தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என FEWS NET தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
Latest News
காலி சிறைச்சாலையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!
Local
02 August 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளியா? : பல வருடங்களுக்குப் பின் வெளியான உண்மை!
Local
02 August 2026
காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன் - யாஷிகா ஆனந்த்
Local
02 August 2026
கடலில் விழுந்த கொள்கலன் இந்துருவையில் கரை ஒதுங்கியது: கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!
Local
02 August 2026
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை
Local
02 August 2026
சமந்தா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது பற்றி அவரே கொடுத்த தகவல்!
Local
02 August 2026
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?
Local
02 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்ப்பு!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026