General31 July 2026

உறிஞ்சுகுழாயை தவறாக கையாண்டவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் சமூக ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வணிக வளாகம் ஒன்றில் உள்ள தோடம்பழப் பானம் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததை அவர் காணொளி எடுத்துள்ளார்.

இந்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் தவறை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது வயது மற்றும் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்தில் கொண்டு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நிறுவனம் இயந்திரத்தைத் தூய்மைப்படுத்தி, அதில் இருந்த 500 உறிஞ்சுகுழாய்களையும் மாற்றியது.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes