General01 August 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை ஆதரவு!

இலங்கையில் சேவையிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு, பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ள அதிருப்திகளுக்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை, தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி தீர்மானம் இயற்றியுள்ளது.

பாரிஸில் நடைபெற்ற பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள்; சபையின் பொதுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேவையிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் முயற்சியாகப் பொதுமக்களால் பார்க்கப்படலாம் என்றும், இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள்; சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes