Entertainment02 August 2026

காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன் - யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'சோம்பி' மற்றும் 'சைத்ரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:

எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.

படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes