காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்கு சேவையாற்றுவதை விடுத்து, அரசுக்கும் மக்களுக்குமே சேவையாற்ற வேண்டும் என ஊடக சந்திப்பொன்றில் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
மேலும், 37வது காவல்துறைத் தலைவர் "தெருவில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த காவல்துறைத் தலைவர் என்ற பெயரில் வரலாற்றில் இடம்பிடிப்பதை" தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த கூற்று தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தக் கருத்துக்களை அரசாங்கம் இலகுவாக எடுத்துக்கொள்ளாது என்றும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய கருத்துக்கள், கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்திற்காக மக்களைப் பலிகொடுத்த ஒரு அரசியல் இயக்கத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனைப் பொறுப்பற்ற செயல் என்றும் விமர்சித்தார்.
தற்போதைய காவல்துறை மா அதிபர் தனது கடமைகளைத் திறம்படச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஊழல், கையூட்டல் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்வதால் பயமடைந்தவர்களாலேயே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகஅமைச்சர் தெரிவித்தார்.
விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி!
Local
05 August 2026
நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா வானூர்தி : 300 அடிகள் கீழே சரிந்து பயணிகள் காயம்!
Local
05 August 2026
இத்தாலியில் தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 27 முக்கிய நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
Local
05 August 2026
திருமணமாகும் பெண்களுக்கு 1 பவுண் தங்கம், பட்டுப்புடவை – 'அண்ணன் சீர் திட்டம்' அறிவிப்பு
Local
05 August 2026
முதன்முறையாக அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலை - 2030 வரை இலக்கு!
Local
05 August 2026
சீனாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம்
Local
05 August 2026
ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை - சார்ஜன்ட் ஆகப் பதவி உயர்வு பெற்றார் ருமேஷ் தரங்க!
Local
05 August 2026
அகிலவிராஜ் காரியவசம் கைது
Local
05 August 2026
வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு
Local
05 August 2026
தமிழ்நாடு பாதீடு 2026-27 : 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!
Local
05 August 2026