ஜப்பானில் கோடைக்கால வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், டோக்கியோவிலுள்ள தமா உயிரியல் பூங்காவில் (Tama Zoological Park) வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
கடந்த ஜூலை மாத இறுதியில், ஒரே வார இடைவெளியில் 3 முதல் 15 வயதுக்குட்பட்ட 'முகி' (Mugi - 3), 'இச்சிகோ' (Ichigo - 11), மற்றும் 'லுவேனா' (Luena - 15) ஆகிய மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்தன.
உடற்கூறாய்வு முடிவுகளில், நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மற்றும் பல உறுப்புகள் செயலிழந்தமையே அவற்றின் இறப்புக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது மேலும் மூன்று சிங்கங்கள் (இரண்டு ஆண், ஒரு பெண்) உடல்நலக் குறைவால் எழுந்து நிற்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அவற்றுக்கு திரவ ஆகாரங்கள், மருந்துகள் மற்றும் விட்டமின்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நான்கு சிங்கங்கள் குணமடைந்து வரும் நிலையில், ஆறு சிங்கங்கள் ஆரோக்கியமாக உள்ளன. அவை குளிரூட்டி மற்றும் பாரிய மின்விசிறிகள் வசதி கொண்ட பிரதித்யேக அறைகளுக்கு மாற்றப்படவுள்ளன.
இதேவேளை, ஜப்பானில் இந்த கோடைக்காலத்தில் மாத்திரம் 43,000-க்கும் மேற்பட்டோர் வெப்பவாதத்தால் (Heatstroke) பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை ஆபத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளப் பல்வேறு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை அந்த நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
(படம்- உயிரிழந்த லுவேனா -15 என்ற சிங்கம்)
Latest News
டொராண்டோ திரைப்பட விழாவில் அமலா பாலின் ஹாஃப்: சர்வதேச அளவில் மாஸ் காட்டும் புதிய படம்!
கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார
இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் : முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்
ஹாய் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? – வெளியீட்டு திகதி குறித்து குழப்பம்
பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு