General04 August 2026

சிறைச்சாலை நெருக்கடிக்குத் தீர்வாக வீட்டுக்காவல்: புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி!

சிறைச்சாலைகளிலுள்ள அதிக நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வாக சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட, வரைவு சட்ட மூலத்தைச் பரிசீலிக்கும் யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான மேலும் சில புதிய விதிகளை உள்ளடக்கி, வரைவு சட்டமூலத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனிடையே, நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes