நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் யோசனை நிறைவேற்றப்பட்டால், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்து, நாடு படிப்படியாகச் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்து இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹிரு டி.வியி ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், நீதித்துறையின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகளையே மீண்டும் வேறு வடிவத்தில் செய்ய முற்படுவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற சுதந்திரத்தைக் குறைப்பதற்கோ அல்லது பறிப்பதற்கோ எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், இந்த யோசனை கட்டாயமாகப் பொதுஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த யோசனை பொருத்தமற்றது என முப்பீட மகாநாயக்க தேரர்களும், அங்லிகன் திருச்சபையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகளை விரைவுபடுத்துவதே நோக்கம் என அரசாங்கம் கூறினாலும், இந்த அவசரத் திருத்தத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. நீதிமன்ற முறைமை மீதான மக்களின் நம்பிக்கை உடைந்தால் அதனை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம்.
இறுதியில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதற்கான இயலுமை இல்லாமலும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹிரு டி.வியி ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், நீதித்துறையின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகளையே மீண்டும் வேறு வடிவத்தில் செய்ய முற்படுவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற சுதந்திரத்தைக் குறைப்பதற்கோ அல்லது பறிப்பதற்கோ எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், இந்த யோசனை கட்டாயமாகப் பொதுஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த யோசனை பொருத்தமற்றது என முப்பீட மகாநாயக்க தேரர்களும், அங்லிகன் திருச்சபையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகளை விரைவுபடுத்துவதே நோக்கம் என அரசாங்கம் கூறினாலும், இந்த அவசரத் திருத்தத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. நீதிமன்ற முறைமை மீதான மக்களின் நம்பிக்கை உடைந்தால் அதனை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம்.
இறுதியில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதற்கான இயலுமை இல்லாமலும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Latest News
முன்னாள் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
05 August 2026
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் - ஜனாதிபதி சந்திப்பு: 350 மில்லியன் டொலர் இந்திய கடன் ஒப்பந்தம் கைச்சாத்து
Local
05 August 2026
கோட்-சூட் இல்லை... : எளிமையான தோற்றத்தில் சட்டமன்றம் வந்த முதலமைச்சர் விஜய்!
Local
05 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி!
Local
05 August 2026
நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா வானூர்தி : 300 அடிகள் கீழே சரிந்து பயணிகள் காயம்!
Local
05 August 2026
இத்தாலியில் தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 27 முக்கிய நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
Local
05 August 2026
திருமணமாகும் பெண்களுக்கு 1 பவுண் தங்கம், பட்டுப்புடவை – 'அண்ணன் சீர் திட்டம்' அறிவிப்பு
Local
05 August 2026
முதன்முறையாக அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலை - 2030 வரை இலக்கு!
Local
05 August 2026
சீனாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம்
Local
05 August 2026
ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை - சார்ஜன்ட் ஆகப் பதவி உயர்வு பெற்றார் ருமேஷ் தரங்க!
Local
05 August 2026