General04 August 2026

ஊழியர் சேமலாப நிதியில் புதிய மாற்றங்கள் - அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு!

தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, தரமானதும் திறன்மிக்கதுமான சேவைகளை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான முன்மொழிவுகளை இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவைத் தயாரித்துள்ளது.

அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes