காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத மனிதாபிமானப் பேரவலமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி ஹுசைனியா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற 36ஆவது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, பலர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அதன் வலியோடு வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அவர்கள் சிந்திய இரத்தம்தான் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக மண்ணில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பாரிய இழப்புகளும் மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது எனவும், அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாகவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட ஹுசைனியா பள்ளிவாசல் உள்ளிட்ட மத மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் தொடர்பிலும், மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் காணிகள் தொடர்பிலும் உரிய வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் மதிக்கப்பட வேண்டும்." என அவர் கூறினார்.
Latest News
பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!
Local
05 August 2026
அதிவேகப் பாதைகளில் பயணிப்போருக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: உற்பத்தியாளர்களுக்கான கால அவகாசம் நீடிப்பு
Local
05 August 2026
அதிரடியாக குறைந்த எண்ணெய் விலை : ட்ரம்பின் முக்கிய அறிவிப்பால் வந்த மாற்றம்!
Local
05 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு: மகாவலி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை!
Local
05 August 2026
இரத்மலானை வீடொன்றின் மீது அடுத்தடுத்து வீசப்பட்ட 2 கைக்குண்டுகள் : பதற்றத்தில் அப்பகுதி மக்கள்!
Local
05 August 2026
ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!
Local
05 August 2026
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026