அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ( கோப் குழு) கூட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கட்டுமானப் தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் (CIDA) அதிகாரிகள் இருவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அந்த மன்னிப்பை ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026