அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ( கோப் குழு) கூட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கட்டுமானப் தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் (CIDA) அதிகாரிகள் இருவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அந்த மன்னிப்பை ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!
Local
07 August 2026
நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!
Local
07 August 2026
கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தனிப்பட்ட கருத்து!
Local
07 August 2026
லங்கா மெட்ரோ ட்ரான்சிட் புதிய மெட்ரோ பேருந்து வாரஇறுதி அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது!!
Local
07 August 2026
மெகசின் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது!
Local
07 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனு ஒன்றில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளான மரண தண்டனை கைதிகள்!
Local
07 August 2026
ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
Local
07 August 2026
பாலஸ்தீன நிலத்தில் இருந்து மரங்களை அகற்றும் இஸ்ரேல்!
Local
07 August 2026
ஈரான் விடயத்தில் தோல்வியடைந்த அதிகாரிகளை தண்டித்த இஸ்ரேல்!
Local
07 August 2026
தனது கின்னஸ் உலக சாதனையைத் தானே மீண்டும் புதுப்பித்த பெண்!
Local
07 August 2026